கடந்த வருட இறுதியில் ஆண்டு ஒன்பது வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் நத்தார் பண்டிகையின் வருகையை ஒட்டி தமிழில் ஒரு வாழ்த்து அட்டையைத் தமக்குப் பிடித்தமான ஒருவருக்குச் செய்யுமாறு வகுப்பில் செய்முறைப் பயிற்சியாகக் கொடுத்திருந்தேன்.
அரன் என்ற மாணவன் வகுப்பில் தன்னுடய தாயாருக்கு வரைந்த சுயமாக வகுப்பில் சுமார் ஐந்து நிமிடத்தில் எழுதி வழங்கிய வாழ்த்து அட்டை இது.
அருகாக ஒரு இதயம் படமும் வரைந்திருந்தார். வாழ்த்து இது தான்.
அன்புள்ள அம்மாவிற்கு,
”நீங்கள் செய்யும் பருப்பு
போக்க வைக்கும் பசிப்பு
புது வருடப் பிறப்பு
கொண்டாடுங்கள் சிறப்பு
சண்டாவும் வருவார் - யேசு
நாதரும் வருவார்
மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் - பாது
காப்பாகக் கொண்டாடுங்கள்.
உங்களுடய செல்ல மகன்,
அரன்.