Thursday, April 14, 2011

இலங்கையின் மலைப் பிரதேசத்திற்கு நான் செய்த பிரயாணம்






கடந்த மார்கழி,தைமாத பாடசாலை விடுமுறையின் போது, நானும் என் குடும்பத்தினரும் இலங்கை சென்று இருந்தோம்.நாங்கள் கொழும்பு நகரில் சில வாரங்கள் தங்கி இருந்த போது, சில நாட்களுக்கு கண்டிக்கு அண்மையில் இருக்கும் உல்லாசப் பிரயாணிகள் செல்லும் இடங்களுக்குச் சென்றோம்.

நாங்கள் முதலாவதாகச் சென்றது ‘பின்னவல’என்ற இடத்தில் இருக்கும் அநாதை யானைகள் சாலை.(யானைகள் சரனாலையம்).(ஆங்கிலத்தில் Elephant Orphanage என்று சொல்வார்கள்) இங்கு சிறிய,பெரிய யானைகள்,குருட்டு யானைகள்,பெற்றோரை இழந்த யானைக்குட்டிகள் மற்றும் பலவிதமான யானைகள், காட்டில் தங்கள் பாட்டில் வசிக்க முடியாத நிலையில் இருப்பதைக் காணலாம்.இவற்றைக் கவனமாக உணவு, பால் கொடுத்து அக்கறையுடன் பார்த்து விடுவார்கள்.

நான் ஒரு சிறிய யானைக்குட்டிக்கு ஒரு சின்னப் போத்தலில் பால் கொடுத்தேன்.அந்த யானைக்குட்டி எனக்குக் கிட்டே வந்து வாயைத் திறந்து போத்தலில் உள்ள பாலை உறிஞ்சிக் குடித்தது.அதிகமான உல்லாசப் பிரயாணிகள் இங்கே போய் இங்குள்ள யானைகளுக்கு வாழைப்பழம் கொடுத்து அவற்றின் அருகில் நின்று புகைப்படம் எடுப்பார்கள்.இங்கே நான் என் தங்கையுடன் யானையில் ஏறி சவாரி செய்தேன்.வெவ்வேறு நேரங்களில் இங்குள்ள யானைகள் வித்தியாசமான நடவெடிக்கைகளில் ஈடுபடுவதைக் கானலாம்.காலை பத்து மணிக்கு இந்த யானைகளைக் கூட்டிச் சென்று ஆற்றில் குளிக்க விடுவார்கள்.

இவ்விடத்தில் பல souvenir கடைகள் அழகான பொருட்களை விற்பனை செய்கின்றன.நான் ஒரு கடைக்குள் போய் பார்த்தேன்.அங்கே அவர்கள் யானைகளின் சாணியைப் பாவித்து எப்படி கடதாசி செய்யலாம் என்று காட்டினார்கள்.பட கடதாசிப் பொருட்களும் விற்பனைக்கு இருந்தன.

நாங்கள் அடுத்ததாக சிகிரியா என்ற இடத்திற்குச் சென்றோம்.அந்த இடத்தில் ஒரு பெரிய பாறையின் மீது ஐந்தாம் நூற்றாண்டில் கட்டிய அரண்மனை இருநூறு மீற்றருக்கு மேலான உயரத்தில் இருக்கிறது.இது அந்தக் காலத்தில் இலங்கையை ஆண்டு வந்த காசியப்பன் என்ற அரசனால் கட்டுவிக்கப் பட்டது.இந்த இடம் ஆசியாவில் உளள மிக முக்கியமான archaeological site ஆக இருக்கிறது.மிக அழகான ஓவியங்கள் இருப்பதை இப்பாறையின் சுவர்களில் காணலாம்.இந்தப் பாறையைச் சுற்றி அழகான தோட்டங்கள்,ஏரிகள் என்பன இருக்கின்றன.இப்பாறைக்கு மேல் உள்ள அரண்மனைக்கு நீர் வழங்கும் தண்ணீர் தொட்டிகள் கூட இருக்கின்றன.

நாங்கள் எல்லோரும் இப்பாறையச் சுற்றியுள்ள படிகளில் ஏறி மேலே உள்ள அரண்மனைக்குப் போனோம்.மொத்தமாக ஆயிரத்து இருநூறு (1200)படிகள் ஏறினோம்.ஏறத்தாள எண்ணூறு படிகள் ஏறிய பின் இந்த அரண்மனையின் வாசலைக் காணலாம்.இந்த வாசல் ஒரு சிங்கத்தின் வாயைப் போன்று இருந்தது.சில நூற்றாண்டுக்கு முன் முழுதாக ஒரு சிங்கத்தின் தலையாக இருந்து, பின்பு கற்கள் உடைந்து விழுந்து விட்டன.தற்போது இந்த வாசலில் சிங்கத்தின் பாதங்கள் மட்டும் இன்னும் இருக்கின்றன.

அடுத்ததாக நாங்கள் தம்புள்ள என்ற இடத்தில் உள்ள rock cave temple க்குப் போனோம்.இது ஒரு பாறையில் ஐந்து குகைக்குள் அமைந்திருக்கும் ஒரு புத்தர் கோயில். இதற்குள் பலவகையான புத்தர் சிலைகள் அழகான ஓவியங்கள் முதலியவற்ரைக் காணலாம்.இந்தக் குகைக்குள் சிலைகளில் விஷ்னுவின் சிலையும் பிள்ளையாரின் சிலையும் இருக்கின்றன.இங்குள்ள ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கைக் கதையை படங்கள் மூலம் கூறுகின்றன.

இந்தக் கோயிலை தம்புள்ள பொற்கோயில் என்றும் சொல்வார்கள்.இங்கே சுமார் முந்நூறு படிகள் ஏற வேண்டும்.இந்தக் கோயிலுக்குள் ஒரு பெரிய கிண்ணம் ஒன்று குகைகளின் மேல் இருந்து ஒழுகி வரும் தண்ணீரை ஏந்திக் கொண்டிருக்கிறது.அற்புதமாக இது ஒரு பொழுதும் வழிந்து விடாது நிறைவாகவே இருக்கும்.தண்ணீரும் எப்பொழுதும் குகையில் இருந்து ஒழுகிக் கொண்டே இருக்கும்.

நாங்கள் கடசியில் பேராதனையில் உள்ள பூங்காவிற்கும் மாத்தளைக்கும் சென்றோம்.

அடுத்த முறை நான் இலங்கைக்குப் போகும் பொழுது எனக்கு மலைப் பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்கள்,நுவரெலியா,கம்பளை போன்ற இடங்களுக்குப் போய் பார்க்க விருப்பம்.

மாணவி சிந்தூரா.சபாநாயகம்
ஆண்டு 9+

12.03.2011 தன் வகுப்பு வேலைக்காக ,மேடைப் பேச்சாகச் சமர்ப்பிக்கப் பட்ட ஒப்படை)

Wednesday, April 13, 2011

எனது பொழுதுபோக்கு


பொழுது போக்கு என்பது மூளைக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியதொன்றாகும்.ஒவ்வொருவருடய பொழுதுபோக்கும் அவரவர் நடத்தைகளுக்கேற்ப வித்தியாசமாக அமைகிறது.அதாவது ஒருவருக்கு மிகப் பிடித்த ஒன்று மற்றவருக்கு பிடித்தமில்லாததாக இருக்கலாம்.

மிகவும் உற்சாகத்தைத் தரக்கூடிய பொழுதுபோக்கு ஒருவருடய ஈர்ப்பு,அவதானிப்பு,கவனத்தால் வளர்க்கப் பட்டதாக இருக்கவேண்டும்.அது மனதுக்கும் உடலுக்கும் ஆறுதலளிப்பது பட்டுமல்லாமல் புதிய புதிய அனுபவத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

எமது வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை பொழுது போக்காக மாற்றிக் கொள்ளலாம்.ஆனால் அதை மிகவும் யோசித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாசித்தல், விளையாடுதல்,வரைதல்,கதை எழுதுதல்,பாடல்கள் படித்தல்,நடனம் ஆடுதல்,விளையாடுதல்,வீட்டை அலங்கரித்தல் போன்றவை சில பொழுது போக்குகளாகும்.

எங்கல் வாழ்வின் இடைவெளியை நிரப்புவதில் பொழுது போக்கும் ஒன்றாகும்.அது எங்கள் ஆண்மாவை உற்சாகப் படுத்தும்.மற்றும் கலை உணர்வை வளர்க்கத் தூண்டும்.அனேகமாக ஒரே மாதிரியான பொழுது போக்குகளை வைத்திருப்பவர்கள் நண்பர்களாக அமைவார்கள்.

ஒருவருடய தனித்துவத்தை அவருடய பொழுது போக்கினால் அறியக் கூடியதாக இருக்கலாம்.அத்துடன் மனதைக் கட்டுப்படுத்தி ஒரு விடயத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்தும் திறனை வளர்க்கக் கூடியதாக இருக்கும்.



ஒரு பொழுது போக்கு உங்களுக்குப் பிடித்தமானதாக அமைந்து விட்டால் எப்பொழுதும் சலிப்பற்ற வாழ்க்கை வாழ்ந்து விடலாம்.

எனது பொழுது போக்கு சித்திரம் வரைதலாகும்.

சர்வாம்பிகா.சுபாங்கன்
ஆண்டு 9+

(12.03.2011 அன்று வகுப்பு வேலைக்காகப் பேச்சாகச் சமர்ப்பிக்கப் பட்ட ஒப்படை)


Tuesday, April 12, 2011

ஆரோக்கியமான வாழ்க்கை


இன்று நான் உங்கள் முன் ஆரோக்கிய வாழ்க்கை பற்றிப் பேசப் போகிறேன்.

இந்த உலகில் வாழ்கின்ற எல்லா மனிதர்களுக்கும் ஆரோக்கிய வாழ்க்கை என்பது மிக முக்கியமானதாகும்.ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மூன்று விடயங்கள் மிக முக்கியமானதாக அமைகின்றன.
1.சத்துள்ள உணவு
2.உடற்பயிற்சி
3.சுத்தமான சூழ்நிலை.

முதலாவதாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமானது சத்துள்ள உணவு.

எமது வாழ்க்கைக்கு சுத்தமான நீர்,காற்று,சக்தி என்பன மிகவும் அவசியமானவை. எமக்குத் தேவையான சக்தியை நாம் உணவில் இருந்தே பெறுகிறோம்.நாம் உண்ணும் உணவு சத்துள்ளதாகவும் சமநிலையானதாகவும் இருக்க வேண்டும்.

தினமும் நாம் உண்ணுகின்ற உணவில் சகல சத்துக்களும் தேவையான அளவில் சேர்க்கப் படவேண்டும்.5 வகையான மரக்கறிகளும் இரண்டு வகையான பழவகைகளும் எமது உணவில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மாப்பொருள்,கனிப்பொருள்கள்,புரதப் பொருள் என்பனவற்றை எமது உணவில் சேர்த்துக் கொள்ளல் அவசியம்.கொழுப்புச் சத்தை அதாவது எண்ணை, நெய் போன்றவற்றை எமது சாப்பாட்டில் குறைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் அவையும் எமது ஆரோக்கியத்துக்குச் சிறிய அளவில் பங்களிப்புச் செய்கின்றன.

இன்றய விஞ்ஞான யுகத்தில் மிக விரைவாகத் தயாரிக்கக் கூடிய உணவுகளையே அதிகமானோர் விரும்புகின்றனர்.அதிலும் சிறப்பாக எம்மைப் போன்ற இளம் வயதினர் அத்தகைய உணவுகளையே மிக மிக விரும்பி உண்கிறோம்.இப்படியான உணவுகள் பெரும்பாலும் கொழுப்புச் சத்துக் கூடியவையாகக் காணப்படுகின்றன.உதாரணமாக Mac,Hungry Jack போன்றவற்றைக் குறிப்பிடலாம்.இவற்றை நாம் தவிர்த்துக் கொள்வது நன்று.

அடுத்ததாக ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமானது உடற்பயிற்சி



தினமும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தைத் தரும்.எம்மில் பலருக்கு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் அதிகம்.அதாவது உடற்பயிற்சி என்ற பெயரில் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடுகிறோம்.

விளையாட்டு உடலுக்குச் சுறுசுறுப்பைத் தரும்.இரத்த ஓட்டத்தைச் சீராக்கி புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.உடலின் பாரத்தை அதாவது எடையை எமது வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற வகையில் பராமரித்தோமானால் எமக்கு நோய் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவே.

சாதாரணமானவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம்.மிக விரைவாகக் கைகளை வீசிக் கொண்டு நடக்கலாம்.அல்லது ஓடலாம்.உடலில் ஏதாவது சமநிலையற்ற தன்மை அதாவது உடற்பருமன் கூடியோ அல்லது கொழுப்புக் கூடியோ இருந்தால் அவர்கள் தினமும் நாற்பது நிமிடங்கள் மிக விரைவாகக் கைகளை வீசிக் கொண்டு நடக்கவேண்டும் அல்லது ஓட வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

அடுத்ததாக ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமானது சுத்தம்

’சுத்தம் சுகம் தரும்’என்பது ஆன்றோர் வாக்கு. எப்போதும் நாம் எம்மையும் எமது சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.காலையிலும் இரவிலும் பல் துலக்க வேண்டும்.தினமும் குளித்து உடலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.எமது உடைகளைத் தோய்த்து சுத்தமாக அணிய வேண்டும்.கைகளால் வேறு வேலைகள் செய்திருந்தால் சாப்பாட்டுக்கு முன்னர் கைகளைக் நன்றாகக் கழுவ வேண்டும்.

எம்மைச் சுத்தமாக வைத்திருப்பது போலவே எமது சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு நாம் எமது பெற்றோருக்கு உதவ வேண்டும்.தேவையற்ற காகிதங்கள், குப்பைகளை வெளியே வீசாது குப்பைத் தொட்டிக்குள் போட வேண்டும்.

எமது ஆரோக்கிய வாழ்க்கைக்கு மேற் குறிப்பிட்ட அதாவது உணவு,உடற்பயிற்சி,சுத்தம் என்பவற்றை விட இன்னும் பல விடயங்களும் அவசியமானவை.நாம் எப்போதுமே எம்மை சந்தோஷமானவர்களாக வைத்திருக்க வேண்டும்.எடுத்ததற்கெல்லாம் கோபப் படாமல் அமைதியாகவும் ஆழமாகவும் சிந்தித்து செயலாற்றப் பழக வேண்டும்.

அவ்வாறு மகிழ்ச்சியாகவும் சமநிலையாகவும் இருப்பதற்கு யார் யாருக்கு எது எது பிடிக்குமோ அவற்றை நாம் செய்யலாம்.பாடல்கள் கேட்கலாம்,புத்தகங்கள் வாசிக்கலாம்,நண்பர்களுடன் பேசலாம்,நல்ல சினிமாப் படங்கள் பார்க்கலாம். குறைந்தது 7 அல்லது 8 மணி நேர நித்திரையும் நமக்கு அவசியம்.



எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்துள்ள உணவு,உடற்பயிற்சி,சுத்தமான சூழ்நிலை,மனச் சந்தோஷம் என்பன அவசியமானவை என்று கூறி உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.

வருணன்.முருகானந்தன்.
ஆண்டு9+

(12.03.2011 நடைபெற்ற வகுப்பு வேலையில் பேச்சாக வழங்கப் பட்ட ஒப்படை)

Monday, April 11, 2011

கைத் தொலைபேசியின் நன்மைகளும் தீமைகளும்


நவீன விஞ்ஞான வளர்ச்சியில் ஒன்று செல்போன் என அழைக்கப் படும் கைத்தொலைபேசி ஆகும்.ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் இருப்பவருடன் தொடர்பு கொண்டு பேச முடியும். உலகத்தில் எங்கிருந்தாலும் எந் நேரத்திலும் பேச முடியும்.ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் இன்று எல்லோரும் கைத்தொலைபேசி வைத்திருக்கிறார்கள்.

இதன் மூலம் கதைப்பது மட்டுமல்லாமல் செய்திகள் அனுப்பவும் ஒளிப்படங்கள் எடுக்கவும் அதை இன்னொருவருக்கு அனுப்பவும் பாடல்கள்,செய்திகள் கேட்பதற்கும் விளையாட்டுக்களை விளையாடுவதற்கும் கூடப் பயன் படுத்தலாம்.

அவசர தேவைகளின் போது,உதாரணமாக விபத்துக்கள் ஏற்படும் போது பொலிஸையோ அம்புலன்ஸையோ அழைப்பதற்கு இது முக்கியமாக உதவுகிறது.மற்றும் உறவினர்களதும் முக்கியமானவர்களதும் விலாசங்கள்,தொலைபேசி இலக்கங்கள்,அவர்களது பிறந்த நாள் மற்றும் முக்கியமான நாட்களையும் இலகுவாக இதில் பதிவு செய்து வைக்கலாம்.

இவற்றை விட சமூக விரோத செயல்கள் நடைபெறும் போது அவற்றைக் கைத் தொலைபேசியில் பதிவு பண்ணி பொலிஸில் ஒப்படைப்பதன் மூலம் குற்றச் செயல்களைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்தியாவில் கைத்தொலைபேசி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 70 கோடி.ஆனால் தங்களுக்கென்று தனிக் கழிவறைகளை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 36 கோடியே 60 லட்சம்.

இவ்வாறான நன்மைகள் இருந்தாலும் கைத்தொலைபேசியால் தீமைகளும் ஏற்படுகின்றன. அதிகமாகக் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களுக்கு  அதிலிருந்து வரும் கதிரியக்கத்தால் (electronic waves) மூளை சம்பந்தமான நோய்கள், மூளைப் புற்று நோய், காது கேட்டலில் பிரச்சினைகள்,உறக்கம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.

வாகனம் ஓட்டும் போது பலர் கைத்தொலைபேசியில் பேசிய வணணம் செல்வதால் அதிகமான விபத்துக்களும் உயிர் இழப்புக்களும் ஏற்படுகின்றன.இளைஞர்களும் யுவதிகளும் இதனை அதிகளவில் பாவிப்பதால் அவர்கள் கைத்தொலைபேசி இல்லாமல் வாழமுடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப் படுகிறார்கள்.

எனது கருத்தில் கைத்தொலைபேசி இன்றய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.ஆனால் ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழி போல் அதிகளவில் கைத்தொலைபேசிகளைப் பாவிப்பதால் பல தீய விளைவுகளையும் எதிர் கொள்ள வேண்டி வரும்.

அவற்றில் இருந்து நீங்கள் கைத்தொலைபேசியின் நன்மை தீமைகளை விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

ஜெ.மயூரி.
ஆண்டு 9+

(12.03.2011 அன்று வகுப்பு வேலைக்காகப் பேச்சாகச் சமர்ப்பிக்கப் பட்ட ஒப்படை)

Sunday, April 10, 2011

காட்டுத் தீ - 2009


சமூகம்;

சனிக்கிழமை 7ம் நாள் மாசி மாதம் 2009ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய மக்கள் கறுப்பு தினமாக நினைவு கூர வேண்டிய நாளாகும்.அவுஸ்திரேலிய வரலாற்ரிலேயே மிகவும் இருண்ட நாட்களில் இதுவும் ஒன்றாகும்.விக்ரோரிய மாநிலத்தில் நடந்த காட்டுத் தீயை அவுஸ்திரேலிய மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

இந்தக் காட்டுத் தீ நிலத்தின் தோற்ரத்தையே மாற்ரி அமைத்தது மட்டும் அல்லாமல் மக்கள் இன்னொரு காட்டுத் தீயைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு மிகவும் கொடூரமானதாகவும் அது இருந்தது.

இந்தக் காட்டுத் தீயினால் 173க்கும் அதிகமான மக்கள் இறந்தார்கள்.1700க்கும் அதிகமான வீடுகள் அழிந்தன.7000 மக்கள் வீட்டை இழந்தார்கள்.

தொழிற்சாலை;

காட்டுத் தீயினால் விக்ரோரிய மாநிலத்தில் திராட்சை பயிரிடப்பட்ட இடங்கள் மிகவும் பாரிய பாதிப்புக்குள்ளானது.மேலும் 2000 கட்டிடங்கள் முழுவதுமாக தரைமட்டமானது.1400க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்தன.55க்கும் அதிகமான வியாபாரத்தலங்கள், 3 பாடசாலைகள், மற்றும் 3 குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவை முற்றிலுமாகப் பாதிப்புக்குள்ளாயின.

விவசாயம்;

4,30,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட செடிகளும் பயிர்களும் காட்டுத்தீயால் முழுவதுமாக அழிந்தது.11,000 க்கும் அதிகமான பண்னை விலங்குகளிறந்தும் காயமும் அடைந்தன.



இந்தக் காட்டுத்தீயினால் விவசாயத்துக்குத் தேவையான பொருட்கள்,விவசாய உதிரிப்பாகங்கல் ஆகியனவும் சேதமடைந்தன.இது மிகவும் விவசாயிகளுக்குப் போதாத காலமாகும்.இந்தப் பாதிப்பில் இருந்து அவர்கள் இயல்பான நிலைக்கு வந்தாலும் அவர்களுடய பாத்திக்கப் பட்ட நிலங்களில் விவசாயம் செய்து மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு அவர்கள் சில காலம் காத்திருக்க வேண்டும்.

பிருந்தா தேவராஜா.
ஆண்டு 9+

(12.03.2011 அன்று வகுப்பு வேலைக்காகப் பேச்சாக சமர்ப்பிக்கப் பட்ட கட்டுரை)

Saturday, April 9, 2011

கணணியும் கையடக்கத் தொலைபேசியும்


விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் மனைத குலத்தின் முன்னேற்றத்துக்கு பலவழிகளில் உதவுகின்றன.இவற்றில் சில தொலைபேசியும் (Telephone) கணணியும்(computer).தலைமுறை ஒன்று(Generation one), தலைமுறை இரண்டு(Generation two), தலைமுறை மூன்று(Generation three)எனப் பல தலைமுறைகளைக் கண்டது இந்தக் கணணியும் தொலைபேசியும்.

ஆரம்பத்தில் பெரிய கருவிகலாக இருந்தவை தற்போது மிகச் சிறிது சிறிதாகி கணணிகள் மடியில் வைத்துப் பாவிக்கக் கூடியதாக மிகச் சிறிய அளவிலும் தொலைபேசிகள் தற்போது சட்டைப் பைக்குள் வைக்கக் கூடியதாகவும் சிறுத்து விட்டன.(initially,computers were big but now we have laptops and things like iphones that we can take around and fit into our pockets.)

இவற்றின் உபயோகங்கள் பல.அவற்ரில் சிலவற்றை மட்டும் நான் இங்கே சொல்லப் போகிறேன்.

ஊர் விட்டு ஊர்,நாடு விட்டு நாடு தொடர்புகளைப் பேணுதல்,வியாபாரம் செய்தல்,அவசர தேவைகளுக்குத் தொடர்பு கொள்ளல் போன்ற பல நன்மைகள் இவற்றால் உண்டு.கணணிகள் மிகப் பெரிய கணிப்புகளை மிகச் சொற்ப நேரத்தில் செய்யக் கூடியவை.(computers provide communication between different countries and different cites, which helps business and can be used for emergency contact)

கணணியின் உதவியின்றி தற்காலத்தில் வங்கிகலில் கணக்கை நடத்த முடியாத நிலை காணப்படுகிறது.கணணி சரியாக வேலை செய்யாததால் வங்கியில் வைத்த பணத்தை மக்கள் எடுக்க முடியாமல் திண்டாடிய செய்திகளை அவ்வளவு எளிதாக யார் தான் மறந்து விடுவார்கள்? (without the use of computers, nowadays, banks can't run)

இவற்றால் விளையும் தீமைகள் தான் என்ன?

கையடக்கத் தொலைபேசி இல்லாவிட்டால் எம்மில் பலருக்கு வாழ்க்கையே ஓடாது.ஏன் பொழுதே விடியாது என்றால் மிகையாகாது.வாகனங்கள் ஓட்டும் போது கையடக்கத் தொலைபேசியைப் பாவிப்பதால் ஏற்படும் விபத்துக்களைப் பற்றிய செய்திகள் வருவது நீங்கள் அறிந்ததே!(people can't manage without their mobile phones for even one day.)

கையக்கத் தொலைபேசியில் இருந்து வரும் மின்னியல் கதிர்கள் மூளைக்காச்சல் மற்ரும் மூளைப் புற்றுநோய் போன்ற பல வருத்தங்களுக்குக் காரணம் என நம்பப் படுகிறது.கணணியிலும் இணையத்திலும் Facebook,Twitter,MSN போன்ற பல இணையத் தளங்களை திரும்பத் திரும்பப் பாவிப்பவர்கள் இதற்கு அடிமைப்படுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.அது மட்டுமல்லாமல் அதிக கணணி, இணையப் பாவனை தூக்கத்தியும் கண்பார்வையையும் கெடுத்து பாவிப்பவரை நாளடைவில் நோயாளியாக்கியும் விடுகிறது.



‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழி ஞாபகத்துக்கு வருகிறதா உங்களுக்கு? கணணியையும் கையடக்கத் தொலைபேசியையும் அளவோடு பாவிக்க வேண்டும்.(mobile phones can cause brain damage)

ஆர்த்தி. கணேசமூர்த்தி.
ஆண்டு 9+


(12.03.2011 அன்று வகுப்பு வேலைக்காக பேச்சாகச் சமர்ப்பிக்கப் பட்ட ஒப்படை)