இணையத்தில் இருந்த கதையைத் தெரிவு செய்து தமிழில் மொழிபெயர்த்தவர்:
அனந்தராம்.ஸ்ரீரங்கநாத ஐயர்.
17.03.2012
ஒரு நாள் அவுஸ்திரேலிய பூர்வ குடிகள் ஒரு குழுவாகக் கங்காரு வேட்டையாடப் போனார்கள். அவர்கள் மரங்களுக்கு அருகே சென்று ஓய்வு எடுத்தார்கள். வேட்டைக்காரர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டே கதைகள் சொல்லிக் கொண்டு, கைகளைச் சூடாக்கிக் கொண்டிருந்தார்கள். பின்னர் கீழ்வானில் அவர்கள் அழகான ஒரு வானவில்லைக் கண்டார்கள்.
அது ஒரு வானவில் பாம்பு. அது தனது பழைய நீர் ஆதாரத்தில் இருந்து மற்றொன்றுக்கு நகரும். வேட்டைக்காரர்களுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. ஏனென்றால் வேட்டைக் காரர்களுக்கு அந்தப் பாம்பு தம் கூடாரத்துக்கு அருகில் இருக்கும் நீர் ஆதாரத்துக்கு அந்த வானவில் பாம்பு வந்து விடும் என்று பயம்.அவர்கள் அவசரமாக வீட்டுக்குத் திரும்பும் போது அன்று அவர்கள் இரண்டு கங்காருகளை மட்டும் பிடித்தனர். அது அனைவருக்கும் சாப்பிடக் காணாது. ஆனாலும் அந்த இரவு ஒரு பெரிய தூங்காத இரவு.
அந்த இரவு ஒரு வேட்டைக் காரன் வயதான ஆண்களிடம் போய் வானவில் பாம்பைப்பற்றிக் கேட்டான். வயதானவர்கள்,’ வானவில் பாம்பு உலகத்தை உருவாக்கிய ஒரு பிராணி. முதன் முதலில் பூமி ஒரு பெரிய தரிசு நிலமாக இருந்தது.வானவில் பாம்பு பூமியச் சுற்றி வந்த போது அதன் உடலின் இயக்கத்தினால் மலைகள் மற்றும் ஆறுகள் பள்ளங்கள் தோண்டப்பட்டன. இறுதியில் வானவில் களைப்பால் ஒரு நீர் ஆதாரத்தில் ஓய்வெடுத்தது.இந்த உலகத்தை உருவாக்கியது இந்த வானவில் பாம்பு தான்’ என்றார்கள்.
அதனால் இந்த நாள் வரை பூர்வ குடிகள் வானவில் பாம்பை ஒரு நீர் ஆதாரத்தில் இருந்து மற்றொரு நீர் ஆதாரத்துக்குப் போகும் போது தொந்தரவு செய்யாமல் இருப்பார்கள்.
மொழிபெயர்ப்பு: அனந்தராம். ஸ்ரீரங்கநாத ஐயர்.
ஆண்டு 9 (Non HSC)
17.03.2012
அனந்தராம்.ஸ்ரீரங்கநாத ஐயர்.
17.03.2012
ஒரு நாள் அவுஸ்திரேலிய பூர்வ குடிகள் ஒரு குழுவாகக் கங்காரு வேட்டையாடப் போனார்கள். அவர்கள் மரங்களுக்கு அருகே சென்று ஓய்வு எடுத்தார்கள். வேட்டைக்காரர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டே கதைகள் சொல்லிக் கொண்டு, கைகளைச் சூடாக்கிக் கொண்டிருந்தார்கள். பின்னர் கீழ்வானில் அவர்கள் அழகான ஒரு வானவில்லைக் கண்டார்கள்.
அது ஒரு வானவில் பாம்பு. அது தனது பழைய நீர் ஆதாரத்தில் இருந்து மற்றொன்றுக்கு நகரும். வேட்டைக்காரர்களுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. ஏனென்றால் வேட்டைக் காரர்களுக்கு அந்தப் பாம்பு தம் கூடாரத்துக்கு அருகில் இருக்கும் நீர் ஆதாரத்துக்கு அந்த வானவில் பாம்பு வந்து விடும் என்று பயம்.அவர்கள் அவசரமாக வீட்டுக்குத் திரும்பும் போது அன்று அவர்கள் இரண்டு கங்காருகளை மட்டும் பிடித்தனர். அது அனைவருக்கும் சாப்பிடக் காணாது. ஆனாலும் அந்த இரவு ஒரு பெரிய தூங்காத இரவு.
அந்த இரவு ஒரு வேட்டைக் காரன் வயதான ஆண்களிடம் போய் வானவில் பாம்பைப்பற்றிக் கேட்டான். வயதானவர்கள்,’ வானவில் பாம்பு உலகத்தை உருவாக்கிய ஒரு பிராணி. முதன் முதலில் பூமி ஒரு பெரிய தரிசு நிலமாக இருந்தது.வானவில் பாம்பு பூமியச் சுற்றி வந்த போது அதன் உடலின் இயக்கத்தினால் மலைகள் மற்றும் ஆறுகள் பள்ளங்கள் தோண்டப்பட்டன. இறுதியில் வானவில் களைப்பால் ஒரு நீர் ஆதாரத்தில் ஓய்வெடுத்தது.இந்த உலகத்தை உருவாக்கியது இந்த வானவில் பாம்பு தான்’ என்றார்கள்.
அதனால் இந்த நாள் வரை பூர்வ குடிகள் வானவில் பாம்பை ஒரு நீர் ஆதாரத்தில் இருந்து மற்றொரு நீர் ஆதாரத்துக்குப் போகும் போது தொந்தரவு செய்யாமல் இருப்பார்கள்.
மொழிபெயர்ப்பு: அனந்தராம். ஸ்ரீரங்கநாத ஐயர்.
ஆண்டு 9 (Non HSC)
17.03.2012
அருமையான கதை!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி அம்மா.
ReplyDeleteஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஅன்பும் நன்றியும் கலந்த புதுவருட பொங்கல் வாழ்த்துக்கள் தங்களுக்கும்.
ReplyDelete