Saturday, April 21, 2012

கிரேக்க நீதிக் கதை




மூலக்கதை: நற்றலி.குடானாஸ் என்ற தன் சினேகிதியிடம் இருந்து.

கேட்டு எழுதியவர்: சிந்தியா.பகீரதன்

சிங்கமும் எலியும்

ஒரு நாள் காட்டினுள் காட்டு ராசாவான சிங்கம் நித்திரையில் ஆழ்ந்திருந்தது. அந்தச் சிங்கத்தின் மேல் ஒரு எலி ஓடியது. இதனால் சிங்கம் விழித்தெழுந்தது. கோபம் கொண்ட சிங்கம் எலியைப் பிடித்து, ’நீ எனக்கு இன்று நல்ல காலைச் சாப்பாடாகப் போகிறாய்’ என்று கர்ஜித்தது. ஆனால் எலியோ சிங்கத்திடம் காட்டுராஜாவே என்னை சாப்பிடாதீர்கள் எனக் கெஞ்சிக் கேட்டது.

சிங்கத்திடம் இன்று நீங்கள் என்னைக் கொல்லாமல் விட்டால் என்றோ ஒரு நாள் உங்களுக்கு என் நன்றியைத் திருப்பிச் செலுத்துவேன் என்றது. சிங்கமோ ’நீ எனக்கு உதவி செய்யப் போகிறாயா’ என்று எலியை ஏளனம் செய்தது. இருந்தாலும் எலியைக் கொல்லாமல் போக விட்டது.

சில நாட்களின் பின் வேடுவர்கள் அந்தச் சிங்கத்தை பொறியில் வீழ்த்தினர். வலையில் அகப்பட்ட சிங்கம் பலமாகக் கர்ஜித்து அழுதது. அந்தச் சிறிய எலி சிங்கத்தின் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வந்து வலையைத் தன் பல்லினால் வெட்டி சிங்கத்தைத் தப்பிப் போக உதவியது. சிங்கம் இந்தச் சின்ன எலி என்னைக் காப்பாற்றி விட்டதே என்று வெட்கப்பட்டு எலிக்கு தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிச் சென்றது.

இந்தக் கதையின் நீதிக் கருத்து:

உடலில் பெரியவராக இருப்பதால் தான் மேலானவர் என்று ஆணவம் கொள்ளக் கூடாது. சிறிய பலமற்ற ஒருவர், தன்னிலும் பெரிய பலமான ஒருவருக்கு உதவும் சந்தர்ப்பங்களும் வரும்.

கேட்டு எழுதியவர்:சிந்தியா.பகீரதன்.
ஆண்டு 9 (Non HSC)
17.03.2012


1 comment: