திராவிடப் பண்பாட்டின் திறவுகோல்
ஆண்டு; 9 / 10 30.03.2013 எழுத்து: யசோதா.ப.
உலகில் 4000 ற்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. தலைமுறை
தலைமுறையாக மனித சமுதாயம் சம்பாதித்த அறிவை எல்லாம் மொழி தான் தன்னுள் வைத்திருக்கிறது.
இப் பல்லாயிரக்கணக்கான மொழிகளுக்குள் எட்டு மொழிகளே செம்மொழி
அந்தஸ்தைப் பெற்றுள்ளன. அவை, கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், பாரசீகம், தமிழ், அரபு,
சீனம், ஹிப்ரூ என்பனவாகும். இவை எவ்வாறு, என்ன அளவுகோலால் வகைப்படுத்தப்பட்டன என்ற
ஐயம் உங்களுக்கு எழலாம். அவை அம் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை,
தாய்மைப்பண்பு, பண்பாடு, கலை, பட்டறிவு அனுபவ வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லாத்
தன்மை, இலக்கிய வளம், உயர்வான சிந்தனை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்
பட்டிருக்கிறது.
பல்லாயிரக்கனக்கான மொழிகளுக்குள் தமிழ் செம்மொழி அந்தஸ்தைப்
பெற்றுத் திகழ்வது நமக்கெல்லாம் பெருமை அல்லவா?
சோக்கிரட்டீஸ், அரிஸ்டோட்டல், பிளேட்டோ போன்ற அறிஞரின் சிந்தனைக்
கருத்துக்களைக் கொண்டிருக்கிறது கிரேக்க மொழி. பயிற்சி தான் முழுமையை ஏற்படுத்துகிறது
என்று சொன்னது இலத்தீன் மொழி, குர்ரான் என்ற சமயப்பொக்கிஷத்தை உலகுக்கு அளித்தது அரபு
மொழி. ஜென் தத்துவங்களை உலகுக்குத் தந்தது சீன மொழி. கணித இலக்க முறைகளை உலகுக்கு வழங்கியது
பாரசீக மொழி, ஹிப்ரூ மொழி உலகுக்கு பைபிளைத் தந்தது. வேதங்களையும் உபநிடதங்களையும்
உலகுக்கு வழங்கி சிறப்புப் பெற்றது சமஸ்கிருத மொழி.
தமிழ் என்ன வகையில் சிறப்புப் பெற்றிருக்கின்றது என்று தெரியுமா?
திராவிடப் பண்பாட்டின் திறவுகோலாகத் தமிழ் இருக்கிறது. தொல்காப்பியம்,
சங்க இலக்கியங்கள், திருக்குறள், காப்பியங்கள் போன்றவை திராவிட வாழ்வின் பெரும் பொக்கிஷங்கள்
ஆகும்.
”யாதும்
ஊரே: யாவரும் கேளிர்”
No comments:
Post a Comment