Saturday, April 21, 2012

உகண்டா நாட்டு நாடோடிக் கதை



மூலம்: worldwide web; மொழிபெயர்ப்பு: அபிநயா. சுதேஸ்குமார்.
17.03.2012

கொல்லனுக்கு வந்த சோதனை


முன்னொரு காலத்தில் உகண்டா என்ற நாட்டில் இடியமீன் என்ற கொல்லன் இருந்தான். அவன் ஒரு திறமையான கொல்லன். ஒவ்வொரு நாளும் பலர் வந்து நின்று அவன் வேலை செய்வதைப் பார்த்து ரசிப்பார்கள். ஒரு நாள் இடியமீன் வேலைசெய்து இருக்கும் போது, அரச காவலன் ஒருவன் அவனிடம் வந்து அவனை அரசன் பார்க்க விரும்புவதாகக் கூறினான்.

இடியமீன் உடனடியாக அரச மாளிகைக்குச் சென்றான். அங்கு அரசன் சொன்னார், ’நீ ஒரு திறமையான கொல்லன் என்ற படியால் உனக்கு ஒரு முக்கியமான வேலை வைத்திருக்கிறேன்.” என்றார். அரசன் அங்கு தயாராக வைத்திருந்த இரும்புத்துண்டுகளை வைத்து ஒரு மனிதனை உருவாக்க வேண்டும் என்றார். அது சிலையாக அல்லாமல் நடக்க, பேச,யோசிக்கக் கூடிய மனிதனாக இருக்க வேண்டும்.

“ஆம் அரசே” என்று சொல்லி மிகக் குழப்பத்துடன் வீடு திரும்பினான் இடியமீன். ஒவ்வொரு நாளும் அரசனின் ஆணையை எப்படி நிறைவேற்றுவது என யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான் இடியமீன்.

ஒரு நாள் அவன் காடு வழியாகச் சென்றுகொண்டிருந்த போது ஒரு விசித்திர மனிதனைச் சந்தித்தான். அந்த மனிதன் இடியமீனிடம்,’ஏன் கவலையாக இருக்கிறாய்” எனக் கேட்டான்.அதற்கு இடியமீன் தனக்கு வந்த சோதனையைச் சொன்னான். அதற்கு அந்த விசித்திர மனிதன்,”உனக்கு நான் ஒரு ஆலோசனை கூறுகிறேன்.”என்று சொல்லி அரசனிடம் 1000 வண்டில் கரி அதுவும் தலைமயிரை எரித்து உருவாக்கப்பட்ட கரியும் 1000 குடம் கண்ணீரும் தேவை எனக் கேட்குமாறு சொன்னான்.

இடியமீனும் இந்த ஆலோசனைப்படி அரசனிடம் சென்று அந்த விசித்திர மனிதன் கூறிய பொருட்கள் தேவை என அரசனிடம் கேட்டான். அரசனும் தருவதாகக் கூறி தனது பணியாட்களிடம் தலைமயிரை வளிக்குமாறு சொன்னார்.ஆனால் அவர்களால் 1000 குடம் கண்ணீரும் 1000 வண்டில் கரியும் எடுக்க முடியவில்லை.

அப்போது தான் அரசன் அது ஒரு முடியாத காரியம் என உணர்ந்து தனது தவறையும் உணர்ந்தார்.

இடியமீனும் மிக்க மகிழ்ச்சியோடு வீடு சென்றான்.

மொழிபெயர்ப்பு:அபிநயா.சுதேஸ்குமார்
ஆண்டு 9 (Non HSC)
17.03.2012

No comments:

Post a Comment