Saturday, April 21, 2012

இந்திய நாடோடிக் கதை





கேட்டு எழுதியவர்: அரன்.உதயகுமார்

ஆமையும் முயலும்

ஒரு நாள் ஒரு முயல் ஆமையைப் பார்த்துக் கேலி செய்தது. கவலையடைந்த ஆமை முயலிடத்தைப் பார்த்து ஒரு ஓட்டப் போட்டிக்குப் பங்கு பெறக் கேட்டார்.முயல் ஏற்றுக் கொண்டார்.

பகலில் ஆமையும் முயலும் ஓட ஆயத்தமாக நின்றார்கள். போட்டி ஆரம்பமாகியது. முயல் வேகமாக ஓடியது. ஆமை மெதுவாக நகர்ந்தது. முயல் இறுதியில் “அந்த ஆமை மெதுவாக வருகிறது. நான் இங்கே தூங்குகிறேன். அது கிட்ட வந்தவுடன் ஓடி விடுவோம்” என்று தூங்கியது. ஆமை மெல்லமா நடந்து போய் முயலைத் தாண்டி போட்டியை முடித்தது. ஆகையால் முயல் தோற்றது.

இன்னொரு நாள் ஒரு சிங்கம் அதனின் நண்பனுக்கு தகவல் கொடுக்க இருந்தது. முயலையும் ஆமையையும் சிங்கம் கேட்டதால் அவர்கள் இரண்டு பேரும் ஓம் என்று சொன்னார்கள். அதனால் அவர்களை அந்தத் தகவலைக் கொடுக்க சிங்கம் அனுமதித்தது. அந்தத் தகவலைக் கொடுக்க ஆற்றையும் நிலத்தையும் தாண்டிப் போக வேண்டும்.அதனால் தரையில் போகும் போது முயல் ஆமையைத் தூக்கிக் கொண்டு ஓடியது.ஆற்றைக் கடக்கும் போது ஆமை முயலைத் தூக்கிக் கொண்டு நீந்தியது.

ஆகையால் தகவல் மற்றச் சிங்கத்துக்குக் கிடைத்தது.

கேட்டு எழுதியவர்: அரன்.உதயகுமார்.
ஆண்டு 9 (Non HSC)
17.03.20122


No comments:

Post a Comment