Saturday, April 21, 2012

அவுஸ்திரேலியப் பழங்குடிகளின் நாடோடிக் கதை

இணையத்தில் இருந்த கதையைத் தெரிவு செய்து தமிழில் மொழிபெயர்த்தவர்:
அனந்தராம்.ஸ்ரீரங்கநாத ஐயர்.
17.03.2012



ஒரு நாள் அவுஸ்திரேலிய பூர்வ குடிகள் ஒரு குழுவாகக் கங்காரு வேட்டையாடப் போனார்கள். அவர்கள் மரங்களுக்கு அருகே சென்று ஓய்வு எடுத்தார்கள். வேட்டைக்காரர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டே கதைகள் சொல்லிக் கொண்டு, கைகளைச் சூடாக்கிக் கொண்டிருந்தார்கள். பின்னர் கீழ்வானில் அவர்கள் அழகான ஒரு வானவில்லைக் கண்டார்கள்.

அது ஒரு வானவில் பாம்பு. அது தனது பழைய நீர் ஆதாரத்தில் இருந்து மற்றொன்றுக்கு நகரும். வேட்டைக்காரர்களுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. ஏனென்றால் வேட்டைக் காரர்களுக்கு அந்தப் பாம்பு தம் கூடாரத்துக்கு அருகில் இருக்கும் நீர் ஆதாரத்துக்கு அந்த வானவில் பாம்பு வந்து விடும் என்று பயம்.அவர்கள் அவசரமாக வீட்டுக்குத் திரும்பும் போது அன்று அவர்கள் இரண்டு கங்காருகளை மட்டும் பிடித்தனர். அது அனைவருக்கும் சாப்பிடக் காணாது. ஆனாலும் அந்த இரவு ஒரு பெரிய தூங்காத இரவு.

அந்த இரவு ஒரு வேட்டைக் காரன் வயதான ஆண்களிடம் போய் வானவில் பாம்பைப்பற்றிக் கேட்டான். வயதானவர்கள்,’ வானவில் பாம்பு உலகத்தை உருவாக்கிய ஒரு பிராணி. முதன் முதலில் பூமி ஒரு பெரிய தரிசு நிலமாக இருந்தது.வானவில் பாம்பு பூமியச் சுற்றி வந்த போது அதன் உடலின் இயக்கத்தினால் மலைகள் மற்றும் ஆறுகள் பள்ளங்கள் தோண்டப்பட்டன. இறுதியில் வானவில் களைப்பால் ஒரு நீர் ஆதாரத்தில் ஓய்வெடுத்தது.இந்த உலகத்தை உருவாக்கியது இந்த வானவில் பாம்பு தான்’ என்றார்கள்.

அதனால் இந்த நாள் வரை பூர்வ குடிகள் வானவில் பாம்பை ஒரு நீர் ஆதாரத்தில் இருந்து மற்றொரு நீர் ஆதாரத்துக்குப் போகும் போது தொந்தரவு செய்யாமல் இருப்பார்கள்.

மொழிபெயர்ப்பு: அனந்தராம். ஸ்ரீரங்கநாத ஐயர்.
ஆண்டு 9 (Non HSC)
17.03.2012

கிரேக்க நீதிக் கதை




மூலக்கதை: நற்றலி.குடானாஸ் என்ற தன் சினேகிதியிடம் இருந்து.

கேட்டு எழுதியவர்: சிந்தியா.பகீரதன்

சிங்கமும் எலியும்

ஒரு நாள் காட்டினுள் காட்டு ராசாவான சிங்கம் நித்திரையில் ஆழ்ந்திருந்தது. அந்தச் சிங்கத்தின் மேல் ஒரு எலி ஓடியது. இதனால் சிங்கம் விழித்தெழுந்தது. கோபம் கொண்ட சிங்கம் எலியைப் பிடித்து, ’நீ எனக்கு இன்று நல்ல காலைச் சாப்பாடாகப் போகிறாய்’ என்று கர்ஜித்தது. ஆனால் எலியோ சிங்கத்திடம் காட்டுராஜாவே என்னை சாப்பிடாதீர்கள் எனக் கெஞ்சிக் கேட்டது.

சிங்கத்திடம் இன்று நீங்கள் என்னைக் கொல்லாமல் விட்டால் என்றோ ஒரு நாள் உங்களுக்கு என் நன்றியைத் திருப்பிச் செலுத்துவேன் என்றது. சிங்கமோ ’நீ எனக்கு உதவி செய்யப் போகிறாயா’ என்று எலியை ஏளனம் செய்தது. இருந்தாலும் எலியைக் கொல்லாமல் போக விட்டது.

சில நாட்களின் பின் வேடுவர்கள் அந்தச் சிங்கத்தை பொறியில் வீழ்த்தினர். வலையில் அகப்பட்ட சிங்கம் பலமாகக் கர்ஜித்து அழுதது. அந்தச் சிறிய எலி சிங்கத்தின் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வந்து வலையைத் தன் பல்லினால் வெட்டி சிங்கத்தைத் தப்பிப் போக உதவியது. சிங்கம் இந்தச் சின்ன எலி என்னைக் காப்பாற்றி விட்டதே என்று வெட்கப்பட்டு எலிக்கு தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிச் சென்றது.

இந்தக் கதையின் நீதிக் கருத்து:

உடலில் பெரியவராக இருப்பதால் தான் மேலானவர் என்று ஆணவம் கொள்ளக் கூடாது. சிறிய பலமற்ற ஒருவர், தன்னிலும் பெரிய பலமான ஒருவருக்கு உதவும் சந்தர்ப்பங்களும் வரும்.

கேட்டு எழுதியவர்:சிந்தியா.பகீரதன்.
ஆண்டு 9 (Non HSC)
17.03.2012


இந்திய நாடோடிக் கதை





கேட்டு எழுதியவர்: அரன்.உதயகுமார்

ஆமையும் முயலும்

ஒரு நாள் ஒரு முயல் ஆமையைப் பார்த்துக் கேலி செய்தது. கவலையடைந்த ஆமை முயலிடத்தைப் பார்த்து ஒரு ஓட்டப் போட்டிக்குப் பங்கு பெறக் கேட்டார்.முயல் ஏற்றுக் கொண்டார்.

பகலில் ஆமையும் முயலும் ஓட ஆயத்தமாக நின்றார்கள். போட்டி ஆரம்பமாகியது. முயல் வேகமாக ஓடியது. ஆமை மெதுவாக நகர்ந்தது. முயல் இறுதியில் “அந்த ஆமை மெதுவாக வருகிறது. நான் இங்கே தூங்குகிறேன். அது கிட்ட வந்தவுடன் ஓடி விடுவோம்” என்று தூங்கியது. ஆமை மெல்லமா நடந்து போய் முயலைத் தாண்டி போட்டியை முடித்தது. ஆகையால் முயல் தோற்றது.

இன்னொரு நாள் ஒரு சிங்கம் அதனின் நண்பனுக்கு தகவல் கொடுக்க இருந்தது. முயலையும் ஆமையையும் சிங்கம் கேட்டதால் அவர்கள் இரண்டு பேரும் ஓம் என்று சொன்னார்கள். அதனால் அவர்களை அந்தத் தகவலைக் கொடுக்க சிங்கம் அனுமதித்தது. அந்தத் தகவலைக் கொடுக்க ஆற்றையும் நிலத்தையும் தாண்டிப் போக வேண்டும்.அதனால் தரையில் போகும் போது முயல் ஆமையைத் தூக்கிக் கொண்டு ஓடியது.ஆற்றைக் கடக்கும் போது ஆமை முயலைத் தூக்கிக் கொண்டு நீந்தியது.

ஆகையால் தகவல் மற்றச் சிங்கத்துக்குக் கிடைத்தது.

கேட்டு எழுதியவர்: அரன்.உதயகுமார்.
ஆண்டு 9 (Non HSC)
17.03.20122


உகண்டா நாட்டு நாடோடிக் கதை



மூலம்: worldwide web; மொழிபெயர்ப்பு: அபிநயா. சுதேஸ்குமார்.
17.03.2012

கொல்லனுக்கு வந்த சோதனை


முன்னொரு காலத்தில் உகண்டா என்ற நாட்டில் இடியமீன் என்ற கொல்லன் இருந்தான். அவன் ஒரு திறமையான கொல்லன். ஒவ்வொரு நாளும் பலர் வந்து நின்று அவன் வேலை செய்வதைப் பார்த்து ரசிப்பார்கள். ஒரு நாள் இடியமீன் வேலைசெய்து இருக்கும் போது, அரச காவலன் ஒருவன் அவனிடம் வந்து அவனை அரசன் பார்க்க விரும்புவதாகக் கூறினான்.

இடியமீன் உடனடியாக அரச மாளிகைக்குச் சென்றான். அங்கு அரசன் சொன்னார், ’நீ ஒரு திறமையான கொல்லன் என்ற படியால் உனக்கு ஒரு முக்கியமான வேலை வைத்திருக்கிறேன்.” என்றார். அரசன் அங்கு தயாராக வைத்திருந்த இரும்புத்துண்டுகளை வைத்து ஒரு மனிதனை உருவாக்க வேண்டும் என்றார். அது சிலையாக அல்லாமல் நடக்க, பேச,யோசிக்கக் கூடிய மனிதனாக இருக்க வேண்டும்.

“ஆம் அரசே” என்று சொல்லி மிகக் குழப்பத்துடன் வீடு திரும்பினான் இடியமீன். ஒவ்வொரு நாளும் அரசனின் ஆணையை எப்படி நிறைவேற்றுவது என யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான் இடியமீன்.

ஒரு நாள் அவன் காடு வழியாகச் சென்றுகொண்டிருந்த போது ஒரு விசித்திர மனிதனைச் சந்தித்தான். அந்த மனிதன் இடியமீனிடம்,’ஏன் கவலையாக இருக்கிறாய்” எனக் கேட்டான்.அதற்கு இடியமீன் தனக்கு வந்த சோதனையைச் சொன்னான். அதற்கு அந்த விசித்திர மனிதன்,”உனக்கு நான் ஒரு ஆலோசனை கூறுகிறேன்.”என்று சொல்லி அரசனிடம் 1000 வண்டில் கரி அதுவும் தலைமயிரை எரித்து உருவாக்கப்பட்ட கரியும் 1000 குடம் கண்ணீரும் தேவை எனக் கேட்குமாறு சொன்னான்.

இடியமீனும் இந்த ஆலோசனைப்படி அரசனிடம் சென்று அந்த விசித்திர மனிதன் கூறிய பொருட்கள் தேவை என அரசனிடம் கேட்டான். அரசனும் தருவதாகக் கூறி தனது பணியாட்களிடம் தலைமயிரை வளிக்குமாறு சொன்னார்.ஆனால் அவர்களால் 1000 குடம் கண்ணீரும் 1000 வண்டில் கரியும் எடுக்க முடியவில்லை.

அப்போது தான் அரசன் அது ஒரு முடியாத காரியம் என உணர்ந்து தனது தவறையும் உணர்ந்தார்.

இடியமீனும் மிக்க மகிழ்ச்சியோடு வீடு சென்றான்.

மொழிபெயர்ப்பு:அபிநயா.சுதேஸ்குமார்
ஆண்டு 9 (Non HSC)
17.03.2012

எகிப்திய நாடோடிக் கதை



ஆதி முதல் மனிதன் எப்படி மரணிக்கும் முறையைத் தெரிவு செய்தான் என்ற கதை:

தன் சினேகிதியான Diana.Estafanos இடம் கேட்டு அதனைத் தமிழில் எழுதி இருந்தவர்: அபிராமி.ஸ்ரீகுமார்.

17.03.2012


முதல் இருந்த மனிதனையும் பெண்ணையும் இறைவன் பார்த்து அவர்கள் சந்திரன் போலவா,மரத்தைப் போலவா இறக்க விரும்புவர் எனக் கேட்டார். சந்திரன் ஒவ்வொரு மாதமும் சிறிது சிறிதாகத் தேய்ந்து இறந்து பின் வளர்ந்து மறு வாழ்வு பெறும். மரம் இறந்தால் அதன் வாழ்வு முடிவுறும். ஆனால் மரங்கள் அதன் விதைகளை விட்டுச் செல்லும்.விதைகள் முளைத்து மரங்களின் வாரிசுகளாகும். மனிதர்களும் தமக்கு வாரிசுகளாகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது நீண்டகாலம் வாழ்ந்து இறக்கலாம்.


மனிதர்களிடம் அவர்களின் தெரிவு என்னவாகும் என இறைவன் அவர்களிடம் விசாரித்தார். ஆதி மனிதனும் பெண்ணும் சற்று யோசித்த பின் தாம் மரங்களைப் போலவே செய்ய விருப்பம் தெரிவித்தனர். பிள்ளைகளைப் பெற்று அவர்கள் உதவியுடனும் அன்புடன், மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பின் மரணிக்க விரும்பினர். இறைவன் அவர்களுக்கு விரும்பியதை அளித்தார்.


அவர்களும் பிள்ளைகளைப் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்து மரணித்தனர்.அது முதல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, தன் இடத்தில் மரங்களைப் போலவே தம் பிள்ளைகளை வாரிசுகளாக விட்டுச் செல்லுகின்றனர்.

கேட்டு எழுதியவர்: அபிராமி.ஸ்ரீகுமார்.
ஆண்டு 9 (Non HSC)
17.03.2012